இன்றைய போட்டோ
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விவசாயி லட்சுமி தேவி, நூற்றுக்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் வகைகளை பாதுகாத்து வருகிறார். அரிய வகை சின்னார் நெல் பயிர் மூலம் வாழிய நிலனே எனும் புறநானூற்றுப்பாடலை உயிர்ப்பித்துள்ளார். சுற்றிலும் பச்சைப்பசேலென தெரிவது நெல்லையப்பர் ரக நெல்; எழுத்தாக இருப்பது சின்னார் நெல் ரகம்.
12-08-2025 | 17:09
மேலும் இன்றைய போட்டோ
குடும்பம், குட்டிகளோட நாங்க பாட்டுக்கு எங்க ஏரியாவுல சுத்தறோம். எங்கள யாரும் தொந்தரவு பண்ணாம இருந்தா, நாங்களும் சமத்தா இருப்போம்… என்பது போல எஸ்டேட் பகுதியில், பகல் நேரத்திலேயே குட்டிகளுடன் உலா வந்த யானைகள். இடம்:சிறுகுன்றா எஸ்டேட், வால்பாறை.
30-10-2025 | 09:44
கடவுளின் தேசத்தில் கண்களுக்கு பசுமை தரும் வயல்வெளி, மிதமான மழையால் நெல் மகசூலுக்கு தயாராகி வருகிறது. இடம்: பந்தலூர் அருகே வயநாடு, கேரளா.
30-10-2025 | 09:41
ராஜஸ்தானின் அஜ்மீர் மாவட்டத்தில் கண்காட்சிக்கு அழைத்து வரப்பட்ட 16 அங்குல உயரம் உடைய புங்கனூர் பசு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
30-10-2025 | 09:36
இடுக்கி அணையின் ஒரு பகுதியான செருதோணி அணையில் ஒரு புறம் தண்ணீரும், அதற்கு ஏற்ப மறுபுறம் மேகங்கள் சூழ்ந்தும் ரம்மியமாக காட்சி அளிக்கிறது.
30-10-2025 | 09:27
திருச்சி மாவட்டத்தில் கொள்முதல் செய்த நெல்லை எடுத்துச் செல்ல லாரிகள் வராததால், உத்தமர்சீலி, பனையபுரம், கிளிக்கூடை கிராமங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளாகவும், குவியலாகவும் தேங்கி கிடக்கிறது.
30-10-2025 | 09:23
தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
30-10-2025 | 09:15
பெரிய காஞ்சிபுரம் நெமந்தகார தெரு, பழனி கோவிலில் கந்தசஷ்டி விழாவின் நிறைவாக ஊஞ்சல் சேவை உத்சவத்தில் முருகன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
30-10-2025 | 08:25