இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
திருச்சி மாவட்டத்தில் கொள்முதல் செய்த நெல்லை எடுத்துச் செல்ல லாரிகள் வராததால், உத்தமர்சீலி, பனையபுரம், கிளிக்கூடை கிராமங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளாகவும், குவியலாகவும் தேங்கி கிடக்கிறது.
30-10-2025 | 09:23
தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
30-10-2025 | 09:15
பெரிய காஞ்சிபுரம் நெமந்தகார தெரு, பழனி கோவிலில் கந்தசஷ்டி விழாவின் நிறைவாக ஊஞ்சல் சேவை உத்சவத்தில் முருகன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
30-10-2025 | 08:25
தென் அமெரிக்க நாடான பிரேசிலின் தலைநகர் பிரசிலீயாவில் உள்ள மருத்துவமனையில் நரம்பியல் நோயாளிகளுக்கு மன அமைதி மற்றும் மகிழ்ச்சியை தர சிறப்பு பயிற்சி பெற்ற நாய்கள் அனுமதிக்கப்படுகின்றன.
30-10-2025 | 08:21
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில் அக்னி ஈஸ்வரர் சன்னதி விமானத்தில் சிமென்ட் கலவை ஒன்பது ஆண்டுகளாக பெயர்ந்து சேதம் அடைந்துள்ளது.
30-10-2025 | 08:17
சேலம் மாவட்டம் மேட்டூர் அணை 16 கண் மதகில் அக் 27ல் உபரி நீர் திறப்பை நிறுத்திய நிலையில், அப்பகுதியில் உள்ள குட்டையில் இருந்து வெளியேற முடியாமல் தவித்த ஏராளமான மீன்கள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் செத்து மிதந்தன.
30-10-2025 | 08:13
ஒரு கிலோ தக்காளி விலை 15 ரூபாய்க்கும் கீழே சென்றதால், விரக்தியில் திருச்சி காவிரியாற்றில் விவசாயிகள் 2 டன்னுக்கும் மேற்பட்ட தக்காளிகளை கொட்டினர்.
30-10-2025 | 08:08