உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பிய பூங்காவை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். காண்போரை கவரும் வண்ணத்திலும், குழந்தைகளுக்கு பிடிக்கும் ஏராளமான சிற்பங்களுடனும் இந்த பூங்கா உள்ளது.

25-10-2025 | 06:31


மேலும் இன்றைய போட்டோ

நம் நாட்டின் வலிமையை பறைசாற்றும் விதத்தில், ராணுவத்தில் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள தவாங்க் என்ற இடத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன. இதில் வைக்கப்பட்டிருந்த நவீன ரக துப்பாக்கியை சிறுவனிடம் காட்டி விளக்கம் அளித்த ராணுவ வீரர்.

25-10-2025 | 06:42


தொல்காப்பிய பூங்காவினுள் வளைந்து நெளிந்து செல்லும் சிற்றோடை, பார்வையாளர்களை பெரிதும் கவர்கிறது. இடம்: ராஜா அண்ணாமலைபுரம், சென்னை

25-10-2025 | 06:31


கடலூர் தென்பெண்ணை ஆற்றில் இருகரை புரண்டோடும் வெள்ளை மழை நீர்.

25-10-2025 | 02:22


விருத்தாசலம் அடுத்த எருமனூரில் உள்ள தற்காலிக நெல் கொள்முதல் நிலையத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நெல் மணிகள் முளைத்துள்ளன.

25-10-2025 | 02:04


மழை காரணமாக உடுமலை அமராவதி அணையின் நீர்மட்டம் 76அடியாக உயர்ந்து காணப்படுகிறது.

24-10-2025 | 17:34


ஊட்டி மலை ரயில் சேவை 5 நாட்களுக்கு பிறகு மீண்டும் துவங்கியது. குதூகலத்துடன் சுற்றுலா பயணிகள்.

24-10-2025 | 10:44


வேலூர் மாநகராட்சி, கன்சால் பேட் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை வேலூர் தீயணைப்பு துறையினர் ரப்பர் படகு மூலம் பத்திரமாக மீட்டனர்.

24-10-2025 | 08:04


டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் பிரச்னை தலை தூக்கி உள்ள நிலையில், கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அரசு சேமிப்பு கிடங்கிற்கு லாரி மூலம் கொண்டு வரப்பட்ட நெல் மூட்டைகள் இறக்கப்படாததால் மழையில் நனைந்து நெல்மணிகள் முளைத்து உள்ளன.

24-10-2025 | 07:33


ஆஸ்திரேலியாவின் பசுமை நிறைந்த கிறிஸ்துமஸ் தீவின் அடர்ந்த காடுகளில், உலகில் எங்கும் காண முடியாத சிவப்பு நண்டுகள் வசிக்கின்றன. இனப்பெருக்கம் காரணமாக ஆண்டுக்கு ஒரு முறை தங்கள் இருப்பிடத்தில் இருந்து புறப்பட்டு கடற்கரையை நோக்கி அவை செல்கின்றன. இவ்வாறு 5 கோடிக்கும் அதிகமான நண்டுகள் நகர்வதால் இடையூறு ஏற்படாத படி அதன் வழித்தடங்கள் தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளன.

24-10-2025 | 07:00