உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

மழையில் நனைந்த அறுவடை நெல்லை, நுகர்பொருள் வாணிப கழகத்தினர் வாங்க மறுப்பதால், ஈர நெல்லை காய வைக்கும் முயற்சியில் விவசாயிகள் ஈடுபட்டு உள்ளனர். இடம்: திருநெல்வேலி

26-10-2025 | 07:27


மேலும் இன்றைய போட்டோ

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் பெய்த கனமழையில் சாலை ஒன்றில் வெள்ளம் போல ஓடிய மழை நீர்.

26-10-2025 | 07:31


பருவமழை துவங்கி உள்ள நிலையில், முறையாக தூர்வாரப்படாமல் ஆகாயத்தாமரை செடிகள் அதிக அளவில் படர்ந்திருக்கும் பல்லாவரம் ஏரி.

25-10-2025 | 18:04


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே தூய்மை பணியாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

25-10-2025 | 18:04


சென்னை நகரில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. இடம்: வேளச்சேரி நெடுஞ்சாலை.

25-10-2025 | 18:03


கடலூர் மஞ்சுகுப்பம் பகுதியில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டுமான பணிகள் குறித்து நகராட்சி நிர்வாகத்துறை இயக்குனர் மதுசூதன் ரெட்டி ஆய்வு செய்தார்.

25-10-2025 | 18:03


ஊட்டி தாவரவியல் பூங்காவிற்கு, கேரள பள்ளி மாணவ, மாணவிகள் அதிகம் வந்தனர்.

25-10-2025 | 18:02


இயற்கையின் கூடாரம் இது...மேகங்களின் தழுவல்கள் மலைகளின் மீது கொண்ட அன்பினில் கொஞ்சம் சுற்றி வளைத்து தான் செல்கிறது கண்களுக்கு விருந்து படைக்க. இடம்: நரசிபுரம் ரோடு, கோவை.

25-10-2025 | 13:14


வடகிழக்கு பருவமழை தொடர்ந்து புயல் எச்சரிக்கை காரணமாக மீனவர்கள் மீன் பிடிக்க. கடலுக்குள் செல்லாமல் தங்களது படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். இடம்: கடலூர்

25-10-2025 | 13:14


சென்னை ஆழ்வார்பேட்டை உள்ள மேம்பாலத்தின் தூண்கள் வண்ணம் பூசப்பட்டு புதுப்பொலிவுடன் காணப்படுகிறது.

25-10-2025 | 13:13