இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
கிணத்துக்கடவு அருகே கோதவாடி குளத்தில் சீமை கருவேல மரங்களுக்கு இடையே தேங்கியுள்ள மழைநீர்.
31-10-2025 | 07:01
நீலகிரி மாவட்டத்தில் கனமழைக்கு பிறகு பசுமைக்கு மாறிய வனம் சூழ்ந்த, மலைகளின் நடுவே அருவியில் வரும் வெள்ளம் வெள்ளி கீற்றாக காட்சியளிப்பது, சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ளது. இடம்: குன்னூர் மேட்டுப்பாளையம் மலை பாதை எதிரே உள்ள பகாசூரன் மலை.
31-10-2025 | 06:59
கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலை வளாகத்தில் அரசு கொள்முதல் செய்து அடுக்கி வைத்துள்ள பல நெல் மூட்டைகள் நனைந்து முளைப்பு ஏற்பட்டு சேதம் அடைந்துள்ளதை, புவனகிரி அதிமுக எம்எல்ஏ அருண்மொழி தேவன் ஆய்வு செய்தார்.
31-10-2025 | 06:54
கேரள மாநிலம் இடுக்கி அணையின் ஒரு பகுதியான செருதோணி அணையில், ஒரு புறம் தண்ணீரும், அதற்கு ஏற்ப மறுபுறம் மேகங்கள் சூழ்ந்தும் ரம்மியமாக காட்சி அளிக்கிறது.
31-10-2025 | 06:41
விருதுநகர் மாவட்ட அளவிலான கலை இலக்கிய விழாவில் களிமண் கொண்டு சிற்பம் செய்யும் போட்டியில் பங்கேற்ற மாணவர்கள்.
30-10-2025 | 17:28
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உட்பட நிர்வாகிகள் பலரும் இருந்தனர்.
30-10-2025 | 10:28