இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
தஞ்சாவூர் பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின், 1,040வது சதய விழாவை யொட்டி, பெரிய கோவில் வளாகத்தில் 400 கலைஞர்கள் பரதநாட்டியமாடி புஷ்பாஞ்சலி செலுத்தினர்.
01-11-2025 | 06:38
உத்திர பிரதேச மாநிலம் வாரணாசியில் நாட்டுக்கோட்டை நகரத்தார் சங்க புதிய கட்டடத்தை துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார். அருகில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், தமிழக அமைச்சர் ரகுபதி.
31-10-2025 | 22:33
திருப்பூர் மாநகராட்சியில் சேகரமாகும் குப்பைகளை, இடுவாய் பகுதியில் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கால்நடைகளுடன் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
31-10-2025 | 13:49
மழை பெய்து ஓய்ந்த நிலையில், மகிழ்ச்சியில் சிறகு விரிக்கும் புறாக்கள். இடம்: ரேஸ்கோர்ஸ், கோவை.
31-10-2025 | 07:04
கிணத்துக்கடவு அருகே கோதவாடி குளத்தில் சீமை கருவேல மரங்களுக்கு இடையே தேங்கியுள்ள மழைநீர்.
31-10-2025 | 07:01
நீலகிரி மாவட்டத்தில் கனமழைக்கு பிறகு பசுமைக்கு மாறிய வனம் சூழ்ந்த, மலைகளின் நடுவே அருவியில் வரும் வெள்ளம் வெள்ளி கீற்றாக காட்சியளிப்பது, சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ளது. இடம்: குன்னூர் மேட்டுப்பாளையம் மலை பாதை எதிரே உள்ள பகாசூரன் மலை.
31-10-2025 | 06:59
கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலை வளாகத்தில் அரசு கொள்முதல் செய்து அடுக்கி வைத்துள்ள பல நெல் மூட்டைகள் நனைந்து முளைப்பு ஏற்பட்டு சேதம் அடைந்துள்ளதை, புவனகிரி அதிமுக எம்எல்ஏ அருண்மொழி தேவன் ஆய்வு செய்தார்.
31-10-2025 | 06:54