இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
சுரைக்காய்க்கு உப்பு இல்லை என்பது பழமொழி. குறைந்தபட்ச விலையும் இல்லாததால், சுரைக்காயை பறிக்காமல் தோட்டத்திலேயே விட்டு விட்டனர் விவசாயிகள். இடம்: மானூர், திருநெல்வேலி மாவட்டம்.
09-11-2025 | 07:17
கடந்த இரண்டு மாதங்களாக, பறவை காய்ச்சல் காரணமாக மூடப்பட்டிருந்த டில்லி தேசிய உயிரியல் பூங்கா, பொதுமக்கள் பார்வைக்கு மீண்டும் திறக்கப்பட்டது. பூங்காவில் உள்ள குளத்தில் இரண்டு பெலிக்கன் பறவைகள் மீன்களை வேட்டையாடி பசி தீர்த்துக்கொண்டன.
09-11-2025 | 07:09
கிறிஸ்மஸ் பண்டிகையொட்டி சென்னை எழும்பூர் போர்டெல் ஹோட்டலில் 100 கிலோ எடையுள்ள பிளம் கேக் கலவை தயாரிக்கும் பணி துவங்கியது. இதில் வைகை ஹோட்டல் குழுமம் இயக்குனர் சித்தார்த்.தினமலர் முதன்மை மக்கள் தொடர்பு அதிகாரி கல்பலதா.
08-11-2025 | 18:05
கார்த்திகை தீபத்தை ஒட்டி வெளி மாநிலத்திற்கு அனுப்புவதற்காக விருத்தாசலம் செராமிக் தொழில்பேட்டையில் அகல் விளக்குகள் தரம் பிரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்.
08-11-2025 | 15:18