இன்றைய போட்டோ
ஊட்டி மார்க்கெட் சாலை எப்போதும் பிசியாக காணப்படுகிறது. பல்வேறு தேவைகளுக்கு வரும் மக்கள் வாகனங்களை சாலையில் இருபுறமும் தாறுமாறாக நிறுத்தி செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். விதி மீறலால் சாலையை கடந்து செல்லும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறுவதும், சாலையை கடந்து செல்லும் பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
17-11-2025 | 08:11
மேலும் இன்றைய போட்டோ
மயிலாடுதுறை காவிரி ஆற்றில் நடந்த துலா உற்சவ தீர்த்தவாரியில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று புனித நீராடினர்.
17-11-2025 | 07:59
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள நவ்காம் போலீஸ் ஸ்டேஷனில், பறிமுதல் செய்து வைக்கப்பட்டிருந்த வெடிமருந்து சமீபத்தில் வெடித்து சிதறியது. இதனால் அப்பகுதியை பாதுகாப்பு படையினர் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். அவர்களிடம் தடுப்பை கடந்து செல்ல அனுமதி கேட்டு நின்ற பெண்.
17-11-2025 | 07:55
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் தன்னார்வ அமைப்பு சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கை பொருத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவருக்கு பேட்டரியில் இயங்கும் செயற்கை கை பொருத்தப்பட்ட நிலையில், அதை இயக்குவது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.
17-11-2025 | 07:38
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் மனிதநேயத்திற்கான நடைப்பயணம் நடந்தது. ஆமதாபாத் செஞ்சிலுவை சங்கம் ஏற்பாடு செய்திருந்த, இந்நிகழ்சியில் மாற்றுத்திறனாளிகள் பெருமளவில் பங்கேற்றனர்.
17-11-2025 | 07:34
புதுடில்லி வசந்த விஹாரில் சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தின் ஸ்ரீ சங்கர வித்யா கேந்திரா உள்ளது. அங்குள்ள ஸ்ரீ சாரதாம்பாள், ஈஸ்வரர் மற்றும் ஆதிசங்கரர் கோவில்களுக்கு, சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமிகள் தனது திருக்கரங்களால் கும்பாபிஷேகம் செய்து அருளினார்.
17-11-2025 | 07:28
கேரள மாநிலம், பாலக்காடு கல்பாத்தியில் நான்கு கோவில்களின் ஆறு தேர்கள் திருவீதியுலா வந்த ரத சங்கமம் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
17-11-2025 | 07:24
மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை சன்னிதானத்தில் ஸ்ரீகோவில் நடையை மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி திறந்தார்.
17-11-2025 | 07:21