உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அணை 143 அடி உயரம் கொண்டது. தற்போது 131 அடியை எட்டி அணை முழுவதும் நிரம்பிய நிலையில் ரம்மியமாக காட்சி அளிக்கிறது.

26-11-2025 | 08:02


மேலும் இன்றைய போட்டோ

புதுச்சேரியில் விரதம் இருந்த பெண் பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல வசதி இல்லாததால் கோவிந்தசாலை ஐயப்பன் கோவிலில் விரதம் முடிக்க பாதயாத்திரையாக வந்தனர்.

26-11-2025 | 08:01


கோவை லீ மெரிடியன் ஓட்டலில் நடந்த முதலீட்டாளர் மாநாட்டில் உயர்தர பம்புகள் மற்றும் மோட்டார் உற்பத்தி தொழில் மேம்பாட்டுக்காக திறன்மிகு மையங்கள் அமைப்பதற்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

25-11-2025 | 21:25


கோவை லீ மெரிடியன் ஓட்டலில் நடந்த டி.என் ரைசிங் கோவை எனும் முதலீட்டாளர் மாநாட்டில் கலந்து கொண்ட தொழில் துறையினர்.

25-11-2025 | 21:24


திருப்பூர் ஆண்டிபாளையம் குளக்கரையில் நடவு செய்யப்பட்டிருந்த பனை மரங்களை, சிலர் வெட்டியுள்ளனர்.அதைப் பார்வையிட்ட வெற்றி அமைப்பின் தலைவர் சிவராம் மற்றும் பனை காக்கும் நண்பர்கள் அமைப்பினர்.

25-11-2025 | 19:45


மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் அகஸ்தியர் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

25-11-2025 | 17:30


திருப்பூர், ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் பள்ளி ஐம்பெரும் விழாவில் மாணவியரின் கலை நிகழ்ச்சி நடந்தது.

25-11-2025 | 17:29


சிவகங்கையில் வல்லபாய் படேல் 150 வது பிறந்தநாளை முன்னிட்டு தேசத்திற்கான எழுச்சி நடைபயணத்தில் கலந்து கொண்ட மாணவர்கள்.

25-11-2025 | 17:29


விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது.

25-11-2025 | 17:28


விருத்தாசலத்தில் தொடர் மழையால் கார்குடல் பகுதியில் உள்ள விளைநிலங்களில் நீரில் மூழ்கியுள்ளது .

25-11-2025 | 17:28