உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

காஞ்சிபுரம் வல்லக்கோட்டை முருகன் கோவிலில், சஷ்டி மண்டபத்தில் உற்சவர் வள்ளி தெய்வாணை சமேத முருகனுக்கு செண்பகம், சாமந்தி, வெற்றிலை, எலுமிச்சை மாலைகள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

26-11-2025 | 10:23


மேலும் இன்றைய போட்டோ

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், பாபநாசம் அணை வேகமாக நிரம்பி வரும் நிலையில், அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் அகஸ்தியர் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

26-11-2025 | 09:59


செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், செவ்வாய் தரிசனத்திற்காக அதிக அளவில் குவிந்த பக்தர்கள், நீண்ட நேரம் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர்.

26-11-2025 | 09:06


ஜம்மு-காஷ்மீரில் கடுங்குளிர் காலம் துவங்கிவிட்டது. இதனால் மரங்களில் இலைகளுக்கு பதில் பனிக்கட்டிகள் உறைந்து கிடக்கின்றன.

26-11-2025 | 08:28


தஞ்சாவூர் பெரியகோவில் எதிரே ஏற்பட்ட விபத்தில், உடைந்த கார் கண்ணாடிகள் சாலையில் சிதறி கிடந்தன. இதனால் பிறருக்கு இடையூறு ஏற்படக்கூடாது என எண்ணி, அங்கு பணியில் இருந்த போக்குவரத்து போலீஸ் எஸ்.ஐ., ராஜகண்ணன், யாரையும் எதிர்பார்க்காமல் தானே துடைப்பம் போட்டு சுத்தம் செய்தார். இந்த செயலை பலரும் பாராட்டி சென்றனர்.

26-11-2025 | 08:22


திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அணை 143 அடி உயரம் கொண்டது. தற்போது 131 அடியை எட்டி அணை முழுவதும் நிரம்பிய நிலையில் ரம்மியமாக காட்சி அளிக்கிறது.

26-11-2025 | 08:02


புதுச்சேரியில் விரதம் இருந்த பெண் பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல வசதி இல்லாததால் கோவிந்தசாலை ஐயப்பன் கோவிலில் விரதம் முடிக்க பாதயாத்திரையாக வந்தனர்.

26-11-2025 | 08:01


கோவை லீ மெரிடியன் ஓட்டலில் நடந்த முதலீட்டாளர் மாநாட்டில் உயர்தர பம்புகள் மற்றும் மோட்டார் உற்பத்தி தொழில் மேம்பாட்டுக்காக திறன்மிகு மையங்கள் அமைப்பதற்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

25-11-2025 | 21:25


கோவை லீ மெரிடியன் ஓட்டலில் நடந்த டி.என் ரைசிங் கோவை எனும் முதலீட்டாளர் மாநாட்டில் கலந்து கொண்ட தொழில் துறையினர்.

25-11-2025 | 21:24


திருப்பூர் ஆண்டிபாளையம் குளக்கரையில் நடவு செய்யப்பட்டிருந்த பனை மரங்களை, சிலர் வெட்டியுள்ளனர்.அதைப் பார்வையிட்ட வெற்றி அமைப்பின் தலைவர் சிவராம் மற்றும் பனை காக்கும் நண்பர்கள் அமைப்பினர்.

25-11-2025 | 19:45