இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
பயங்கரவாத தாக்குதல்களின் போது பொதுமக்களை காப்பாற்றுவது குறித்த ஒத்திகையில் ஈடுபட்ட பீஹார் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார். இடம்: பாட்னா
27-11-2025 | 07:40
குரங்குகள் என்றாலே மரத்திற்கு மரம் தாவிச் சென்று, பழங்களை பறித்து உண்ணும் இனம் என்று இருந்த நிலை மாறிவிட்டது. மரம் ஏறுவதை விட்டுவிட்டு கார் செல்லும் பாதைகளில் குரங்குகள் காத்திருப்பது வழக்கமாகி விட்டது. விருத்தாசலம் திருச்சி நான்கு வழி சாலையில் கருவேப்பிலங்குறிச்சி காப்பு காட்டில் வீசி எறியப்படும் உணவுக்காக காத்திருக்கும் குரங்குகள்.
27-11-2025 | 07:34
சென்னை பட்டரைவாக்கம் ரயில் நிலையத்தில் நடைமேம்பாலம் இருந்தும் ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடக்கும் மக்கள்
26-11-2025 | 22:10
பருவமழைக் காலம் துவங்கவுள்ள நிலையில் பக்கிங்காம் கால்வாய் தூர்வாராமல் கரைகள் முழுவதும் செடிகள் படர்ந்து ஓடைபோல் காட்சியளிக்கிறது.இடம் : நீலாங்கரை
26-11-2025 | 22:09