இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் தரமற்ற இருமல் மருந்து அருந்திய 22 குழந்தைகள் கடந்த மாதம் பலியானதையடுத்து, அந்த மருந்து விற்பனை தடை செய்யப்பட்டது. இந்நிலையில் வட கிழக்கு மாநிலமான திரிபுராவின் அகர்தலாவில் பறிமுதல் செய்யப்பட்ட தரமற்ற இருமல் மருந்து பாட்டில்கள் அழிக்கப்பட்டன.
27-11-2025 | 08:30
கார்த்திகை மாத திருவோணம் நட்சத்திரத்தையொட்டி, ஸ்ரீ தேவி, பூதேவியருடன் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கண்ணாடி அறையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
27-11-2025 | 08:14
விரிசல் ஏற்பட்டு இடிந்து விழும் நிலையில் இருந்த காஞ்சிபுரம் சர்வதீர்த்த குளத்தின் சுற்றுச்சுவர் சீரமைக்கப்பட்டு உள்ளது.
27-11-2025 | 08:09
பந்தலூரில் அதிகாலை நேரத்தில் ஆதவனின் கதிர்கள் பட்ட போது, தங்க நிறத்தில் மின்னும் பசுந்தேயிலை, இப்பகுதிகளின் வாழ்வாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
27-11-2025 | 07:58
இயற்கை எழில் கொஞ்சும் போடி- மூணாறு செல்லும் போடிமெட்டு மலைப்பாதையில் ரோட்டை தழுவிச் செல்லும் பனி மூட்டம்.
27-11-2025 | 07:56
பயங்கரவாத தாக்குதல்களின் போது பொதுமக்களை காப்பாற்றுவது குறித்த ஒத்திகையில் ஈடுபட்ட பீஹார் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார். இடம்: பாட்னா
27-11-2025 | 07:40
குரங்குகள் என்றாலே மரத்திற்கு மரம் தாவிச் சென்று, பழங்களை பறித்து உண்ணும் இனம் என்று இருந்த நிலை மாறிவிட்டது. மரம் ஏறுவதை விட்டுவிட்டு கார் செல்லும் பாதைகளில் குரங்குகள் காத்திருப்பது வழக்கமாகி விட்டது. விருத்தாசலம் திருச்சி நான்கு வழி சாலையில் கருவேப்பிலங்குறிச்சி காப்பு காட்டில் வீசி எறியப்படும் உணவுக்காக காத்திருக்கும் குரங்குகள்.
27-11-2025 | 07:34