உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீ நகரில் குளிர் வாட்டி வதைக்கும் நிலையில், அங்கு நேற்று மைனஸ் 4.4 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது. இதனால் சுற்றுலா பயணியரின் வருகை குறைந்ததால், உலக பிரசித்தி பெற்ற தால் ஏரியில் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது. ஏரியின் கரையோரம் வரிசையாக நிறுத்தப்பட்ட படகுகள். இதனால் படகோட்டிகளின் வாழ்வாதாரம் முடங்கியுள்ளது.

01-12-2025 | 08:30


மேலும் இன்றைய போட்டோ

கர்நாடகாவின் பெங்களூரில் உள்ள கப்பன் பூங்காவில் மலர் கண்காட்சி நடந்து வருகிறது. இதை காண பூங்காவில் குவிந்தவர்கள்.

01-12-2025 | 08:37


டிட்வா புயலால் கடற்கரையில் வீசிய பலத்த காற்றால், மெரினா, பட்டினம்பாக்கம் சர்வீஸ் சாலையில் குவிந்துள்ள மணல். இதில் வாகனங்களில் செல்ல முடியாமல், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.

01-12-2025 | 08:25


சிறப்பு மலர் அலங்காரத்தில் அருள்பாலித்த வல்லக்கோடடை முருகன். இடம்: காஞ்சிபுரம்.

01-12-2025 | 06:56


செங்கல்பட்டு மாமல்லபுரம் பேரிடர் கால சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள இருளர்களுக்கு நகராட்சி சார்பில் உணவு வழங்கப்பட்டது.

01-12-2025 | 06:39


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழாவின் 7ம் நாளான நேற்று தேரோட்டம் நடந்தது. உண்ணாமுலை அம்மனும்-அண்ணாமலையாரும் சிறப்பு அலங்காரத்தில் பெரிய தேரில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற கோஷத்துடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

01-12-2025 | 06:29


டிட்வா புயல் காரணமாக சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் கடல் அலை சீற்றத்துடன் காணப்பட்டன.

30-11-2025 | 15:57


கார்த்திகை திருநாளை முன்னிட்டு சிவகங்கையில் மண் விளக்குகள் விற்பனையாகி வருகிறது.

30-11-2025 | 15:56


இயற்கையை ரசித்து கொண்டிருக்கும் பறவை. இடம்:வாலாங்குளம், கோவை

30-11-2025 | 15:56


தினமலர் நாளிதழின் லட்சிய ஆசிரியர் விருது வழங்கும் விழா கோவையில் நடந்தது. இதில் கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் பங்கேற்று ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கினார்.

30-11-2025 | 10:55