இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
டிட்வா புயலால் பெய்த மழைநீர் வெளியேறாமல் வீடுகளை சுற்றி தேங்கியிருப்பதால், மக்கள் படகில் செல்லும் நிலை உள்ளது. இடம்: தங்கச்சிமடம் ராஜா நகர், ராமநாதபுரம் மாவட்டம்.
02-12-2025 | 07:57
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் 16 ஆண்டுகளுக்கு பின் நடந்த கும்பாபிஷேகத்தின் போது, சிவச்சாரியார்களால் ராஜகோபுர கலசங்களில் ஊற்றப்பட்ட புனித நீர்.
02-12-2025 | 07:51
கார்த்திகை தீப திருவிழா நாளை கொண்டாடப்படுகிறது. அதற்கு தேவையான மண் விளக்குகளை விற்பனை செய்த பெண். இடம்: கவுண்டம்பாளையம், கோவை.
02-12-2025 | 06:23
தென் கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவின் ஆச்சே மாகாணத்தில், கனமழையால் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கால் ஆற்றுப்பாலம் இரண்டாக உடைந்தது. ஆற்றை கடக்க முடியாமல் சேதம் அடைந்த பாலத்தில் தவித்த மக்கள்.
01-12-2025 | 08:41
கர்நாடகாவின் பெங்களூரில் உள்ள கப்பன் பூங்காவில் மலர் கண்காட்சி நடந்து வருகிறது. இதை காண பூங்காவில் குவிந்தவர்கள்.
01-12-2025 | 08:37
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீ நகரில் குளிர் வாட்டி வதைக்கும் நிலையில், அங்கு நேற்று மைனஸ் 4.4 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது. இதனால் சுற்றுலா பயணியரின் வருகை குறைந்ததால், உலக பிரசித்தி பெற்ற தால் ஏரியில் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது. ஏரியின் கரையோரம் வரிசையாக நிறுத்தப்பட்ட படகுகள். இதனால் படகோட்டிகளின் வாழ்வாதாரம் முடங்கியுள்ளது.
01-12-2025 | 08:30