உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரின் மையப்பகுதியில் ஓடும் ஜீலம் நதி நீர் நிறைந்து காணப்படும். ஆனால், தற்போது வறண்டுள்ளது. காஷ்மீர் பகுதியில் நிலவும் தீவிர வறட்சி மற்றும் பருவநிலை மாற்றத்தின் தாக்கமே இதற்கு காரணம் எனக்கூறப்படுகிறது. உள்ளூர் மக்கள் வாழ்க்கையிலும், பொருளாதாரத்திலும் ஜீலம் நதிக்கு முக்கிய பங்கு உள்ளதால், இது கவலைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

10-12-2025 | 22:44


மேலும் இன்றைய போட்டோ

அந்தி சாலையும் மாலை வேளையில் கதிரவன் அஸ்தமனம் ஆகும் நேரத்தில் பக்கிங்காம் கால்வாய் கடலில் கலக்கும் இடமான படகு குழாமில் படகு சவாரி செய்யும் நபர்.இடம் : முட்டுக்காடு

11-12-2025 | 21:25


செம்பரம்பாக்கம் ஏரியின் கரை சீரமைத்து பலப்படுத்தப்பட்ட பகுதியில் தேங்கியிருக்கும் தண்ணீர்

11-12-2025 | 21:24


ஊட்டி அருகே கோக்கால் கிராமத்தில், கோத்தர் பழங்குடியினர் இறந்தவர்களுக்கு வரசாவு சடங்கு செய்ய கிராமம் அருகேவுள்ள இடத்திற்கு சென்றனர்.

11-12-2025 | 21:24


திருப்பூர் பல்லடம் ரோடு, ரமணாஸ் ஓட்டல் குமரகம் ஹாலில் தேசிய சிந்தனை பேரவை தமிழ்நாடு சார்பில் வந்தே மாதரமும் பாரதியும் சிறப்பு கருத்தரங்கம் நடந்தது.

11-12-2025 | 21:24


மகாகவி பாரதியாரின் 144 வது பிறந்த தினத்தை ஒட்டி டெல்லி தமிழ் சங்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மத்திய தகவல் ஒளிபரப்பு துறை இணை அமைச்சர் எல் முருகன் , மற்றும் தமிழ் சங்க துணை தலைவர் ராகவன் நாயுடு, செயலாளர் முகுந்தன், மற்றும் சங்க நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்

11-12-2025 | 21:23


கடலூர் புதுப்பாளையத்தில் ஐய்யப்பா பக்தர்கள் சார்பில் ஐயப்பன் விக்ரக பூஜை நடந்தது.

11-12-2025 | 21:22


கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் மின்னும் வாக்குப்பதிவு இயந்திரங்களை முதற்கட்ட சரிபார்க்கும் பணியினை அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களுடன் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.

11-12-2025 | 17:28


கோவை சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி மேம்பாலம் கட்டி முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் உள்ள நிலையில், பொதுமக்கள் தாங்களாகவே மேம்பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

11-12-2025 | 17:28


கோவை சரவணம்பட்டியில் வழித்தடம் மாறி ஊருக்குள் நுழைந்த காட்டு யானைகள்

11-12-2025 | 17:27