உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் தாசில்தார் அலுவலக வளாகத்தில் உள்ள, சார்-பதிவாளர் அலுவலகத்திற்கு வருவோர் வாகனங்களை கண்டபடி நிறுத்துவதால், தாசில்தார் அலுவலகத்திற்கு வரும் அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் மிகுந்த சிரமமடைந்து வந்தனர். இது குறித்த செய்தி நம் நாளிதழில் படத்துடன் வெளியானதை அடுத்து, வெளி வாகனங்கள் நுழைய வருவாய் துறையினர் அனுமதி மறுத்துள்ளனர்.

12-12-2025 | 06:21


மேலும் இன்றைய போட்டோ

தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்த துப்புரவு பணியாளர்கள் சென்னை ராஜாஜி சாலையில் தலைமைச் செயலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

12-12-2025 | 16:59


புதுச்சேரி நகராட்சியில் பணிபுரியும் வாரிசுதாரர்களுக்கள் பணி நிரந்தரம் வழங்க கோரி சட்டசபை அருகே மறியலில் ஈடுபட்டனர்.

12-12-2025 | 16:59


சிவகங்கையில் சி.ஐ.டி.யு.சங்கம் சார்பில் குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகத்தின் ஊழியர் விரோதப் போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

12-12-2025 | 16:59


கூலிவேலை செய்ய குழுவாக நடந்து செல்லும் மகளிர். இடம்: பூந்தமல்லி புறவழிச்சாலை

12-12-2025 | 16:58


திருநெல்வேலி மாவட்டம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் (மதியம் 12 மணி) பனிபொழிவு அதிகரித்து காணப்படுகிறது..

12-12-2025 | 16:58


மேட்டுப்பாளையம் நகராட்சி கூட்டம் தலைவர் மஹரிபா பர்வீன், நகராட்சி கமிஷனர் அமுதா ஆகியோர் முன்னிலையில் நடந்தது.

12-12-2025 | 16:58


வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இடம்.சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம்.

12-12-2025 | 16:57


ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த கோரி, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தலைமையிலான அணியினர் ஆர்ப்பாட்டம் நடந்தினர். இடம்: விழுப்புரம்.

12-12-2025 | 14:49


விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் பத்மஸ்ரீ விருது பெற்ற வேலு ஆசானின் பாரதி பறை பண்பாட்டு மையத்தை தமிழக கவர்னர் ரவி திறந்து வைத்தார். அவர் பறை இசைத்தார்.

12-12-2025 | 14:48