உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

மாமல்லபுரத்தில் சூரியன் உதயமாகி வானில் உயர்ந்த போது, கடற்கரை கோவில் கோபுர தீபமாக காட்சியளித்தது. இதை சுற்றுலா பயணியர் ரசித்தனர்.

28-12-2025 | 12:41


மேலும் இன்றைய போட்டோ

வைகுண்ட ஏகாதசி ஒட்டி, குறிஞ்சிப்பாடி அலர்மேல் மங்கா ஸமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோவில் மூலவர் வைகுண்டவாசன் அலங்காரத்தில், கண்ணாடி அறையில் காட்சி தந்தார்.

30-12-2025 | 11:27


ஓ.எம்.ஆரில் மெட்ரோ ரயில் பணிக்காக பள்ளம் தோண்டும் போது பிரதான குழாய் சேதமடைந்து லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி சோழிங்கநல்லூர் சாலையில் தேங்கியது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.

30-12-2025 | 08:32


திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் மனைவியுடன் சுவாமி தரிசனம் செய்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்.

30-12-2025 | 08:28


திருப்பூரில் நடந்த திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாட்டில் பங்கேற்க அக்கட்சியின் துணை பொதுச்செயலர் கனிமொழி, திமுக எம்பிக்கள் தமிழச்சி, கனிமொழி சோமு ஆகியோர் சென்னையில் இருந்து கோவைக்கு விமானத்தில் சென்றனர். அப்போது அதே விமானத்தில் பயணித்த தமிழக பாஜ முன்னாள் தலைவர் தமிழிசையுடன் புகைப்படம் எடுத்ததை, 'வெல்லும் தமிழ் பெண்கள்' என குறிப்பிட்டு சமூக வலைதளத்தில் கனிமொழி பதிவிட்டுள்ளார்.

30-12-2025 | 08:26


வட மாநிலங்களில் கடும் பனிமூட்டம் காரணமாக விமானம், ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. பீஹாரிலும் அடர்ந்த பனிமூட்டம் நிலவியதால் ஏராளமான ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. பல ரயில்கள் தாமதமாக புறப்பட்டன. ஒரு சில ரயல்களே இயக்கப்பட்டதால் கூட்டம் அலைமோதியது. ரயிலில் ஏற காத்திருந்த பயணியர். இடம்: பாட்னா.

30-12-2025 | 08:21


வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில் சொர்க்கவாசல் வழியாக வெளியே வந்த பெருமாள்.

30-12-2025 | 07:53


பண்ருட்டி அடுத்த திருவதிகை ரங்கநாத பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி உற்சவ பெருமாள் ஸ்ரீதேவி பூமிதேவியுடன் சொர்க்கவாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

30-12-2025 | 06:27


வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பூர் வீரராகவ பெருமாள் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய காத்திருந்த பக்தர்கள்.

30-12-2025 | 06:26


நம் அண்டை நாடான சீனாவின் பாரம்பரிய நாள்காட்டியின் படி, ஒவ்வொரு ஆண்டும் ஒரு விலங்கின் பெயரால் குறிக்கப்படுவது வழக்கம். இதன்படி, வரும் 2026 குதிரை ஆண்டாக கொண்டாடப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து அந்நாட்டு தலைநகர் பீஜிங்கில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் பிரமாண்டமான குதிரை சிலை காட்சிப்படுத்தப் பட்டிருந்ததை வாடிக்கையாளர்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.

30-12-2025 | 06:16