உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசியின் சிறப்பு நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது. 'ரெங்கா… ரெங்கா...' கோஷம் விண்ணைப் பிளக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ, வேத விற்பன்னர்களின் மந்திர முழக்கங்களுடன் நம் பெருமாள் பரமபத வாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

31-12-2025 | 10:02


மேலும் இன்றைய போட்டோ

ஊட்டி அருகே கோக்கால் பகுதியில், அதிகளவு பூண்டு பயிரிடப்பட்டுள்ளது.

31-12-2025 | 22:04


புத்தாண்டை கொண்டாட வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான இளைஞர்கள் புதுச்சேரிக்கு ரயிலில் வந்தனர்.

31-12-2025 | 22:04


புத்தாண்டு தினத்தை ஒட்டி டில்லியில் பாதுகாப்பு காரணங்கள் கருதி பல்வேறு பூங்காக்கள் மற்றும் சுற்றுலா தலங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. இடம்: சென்டர் சர்க்கிள்

31-12-2025 | 22:03


திருப்பூர், விஸ்வேஸ்வரர் கோவிலில் மார்கழி உற்சவத்தை முன்னிட்டு நெல்லை மகாலட்சுமி குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது.

31-12-2025 | 22:03


தினமலர் கார்னிவல் அப்பார்ட்மெண்ட் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் நடந்த கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பகுதிவாசிகள்

31-12-2025 | 22:02


கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ரயில் தண்டவாளத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்களுடன் சோதனை செய்தனர்.

31-12-2025 | 21:32


கடலூர் ஆல் பேட்டை சோதனை சாவடியில் ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு எஸ்.பி.ஜெயகுமார் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

31-12-2025 | 21:32


சம வேலைக்கு சம ஊதியம் கோரி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தை முற்றுகையிட்டு இடைநிலை ஆசிரியர்கள் ஆறாவது நாளாக நேற்று போராட்டம் நடத்தியவர்களை குண்டுகட்டாக காவல்துறையினர் கைது செய்தனர்.

31-12-2025 | 21:32


பூக்கள் விலை உயர்வு இடம் : கோவை பூ மார்க்கெட்

31-12-2025 | 21:31