இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கையில் ஆருத்ரா தரிசன விழாவில் சுவாமி தரிசனத்திற்காக வரிசையில் நின்ற பக்தர்கள்.
02-01-2026 | 10:55
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சிறப்புமிக்க ஆம்பர் கோட்டையில் அலங்கரிக்கப்பட்ட யானைகள் மீது சுற்றுலாப் பயணியர் சவாரி செய்து புத்தாண்டைக் கொண்டாடினர். யானைகளின் நெற்றியில் வண்ணமயமான ஓவியங்கள் தீட்டப்பட்டு, ராஜஸ்தானி பாரம்பரியத் துணிகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது அவர்களை பெரிதும் கவர்ந்தது.
02-01-2026 | 08:05
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஆத்மநாதசுவாமி திருக்கோவிலில், மார்கழி மாதம் திருவாதிரையை முன்னிட்டு நடந்த திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடிக்க அசைந்து வந்த தேர்.
02-01-2026 | 08:00
மயிலாடுதுறை மாவட்டம் கஞ்சா நகர கிராமத்தில் பழமையான அந்தோணியார் சர்ச் உள்ளது. இங்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற பக்தர்கள் அங்க பிரதட்சணம் செய்தும் மண்டியிட்டு தீச்சட்டி ஏந்தியும் வழிபாடு செய்தனர்.
02-01-2026 | 07:57
கேத்தி பாலாடா பகுதியில் காலை நேர பனிப்பொழிவின் போது, மலைகளின் மீது தவழ்ந்து செல்லும் மேக கூட்டங்கள் வண்ண மயமாய் காட்சி அளிக்கின்றன.
02-01-2026 | 07:48