உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

தினமலர் நாளிதழ் மாணவர் பதிப்பான பட்டம்இதழுடன், ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இணைந்து நடத்திய வினாடி வினா போட்டியின் மெகா இறுதிப்போட்டி சமீபத்தில் நடந்தது. இதில், 4ம் இடம் முதல் 8ம் இடம் வரை பெற்ற மாணவ -மாணவியருக்கு, சைக்கிள், ஸ்மார்ட் வாட்ச் மற்றும் கேடயம் வழங்கப்பட்டன. இதில், இடமிருந்து வலம்: தினமலர் நாளிதழ் இணை ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி, ஜஸ்ட் பை சைக்கிள்ஸ் தலைவர் மகேந்திர முல்லத், ஷார்ப் அண்டு தன்னன் நிறுவன பங்குதாரர் விஸ்வநாதன் வைத்தியநாதன், இஸ்ரோவின் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மைய இயக்குநர் ராஜராஜன், தினமலர் இணை இயக்குநர் ஆர்.சீனிவாசன், ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி நிர்வாக இயக்குநர் அபூர்வா ஹரி, சோல் ஏஸ் நிறுவன துணைத் தலைவர் டாக்டர் சங்கரநாராயணன் மற்றும் சத்யா ஏஜன்சி நிர்வாக இயக்குநர் ஜான்சன் ஜான் ரோஷன். இடம்: கலைவாணர் அரங்கம், சென்னை.

03-02-2026 | 15:09


மேலும் இன்றைய போட்டோ

ஊட்டி தாவரவியல் பூங்காவிற்கு, தொடர் விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர்.

27-06-2026 | 17:56


ம.தி.மு.க வின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ மற்றும் நிர்வாகிகள். இடம்: விஜய்ஸ்ரீ மஹால், அண்ணா நகர்.

27-06-2026 | 17:55


புதுச்சேரி தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் பைபர் படகில் சென்ற மீனவர்கள் வலையில் சிக்கிய அதிக அளவிலான மீன்கள்.

27-06-2026 | 17:54


கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷத்தையொட்டி நந்தி பகவானுக்கு சிறப்பு சந்தன அபிஷேகம் நடந்தது.

27-06-2026 | 17:52


கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷத்தையொட்டி நந்தி பகவானுக்கு தீபாதாரணை நடந்தது.

27-06-2026 | 17:51


சென்னையின் அடையாறு ஆறு கடலில் கலக்கும் இடத்தில் கூட்டமாக இரை தேடி குவிந்துள்ள கூழைக்கிடா, மஞ்சள் மூக்கு நாரை மற்றும் பறவைகள். இடம் : பெசன்ட் நகர்

27-06-2026 | 17:51


சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.

26-06-2026 | 10:23


சென்னையில் நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையில் இருந்து கீழே இறங்கி சென்று முதல்வர் விஜய் பணி நியமன ஆணை வழங்கியது இணையத்தில் பாராட்டை பெற்றுள்ளது.

24-06-2026 | 11:02


மஹா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.கோபுர கலசங்களுக்கு சிவாச்சாரியர்கள் புனிதநீர் ஊற்றினர். இடம்: குருநாதம்பாளையம், திருப்பூர்.

24-06-2026 | 09:03