இன்றைய போட்டோ
திருச்சி துவாக்குடியில் உள்ள பழமையும் பெருமையும் வாய்ந்த நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி எனும் தொழில்நுட்பக் கல்லுாரியில் (முன்பு ரீஜனல் இன்ஜினியரிங் கல்லுாரி) 40 ஆண்டுகளுக்கு முன் படித்த மாணவர்கள் (1981- 85 பேட்ச்) மீண்டும் சந்திக்கும் நிகழ்வு நேற்று நடந்தது. இதில் குழு புகைப்பட ம் எடுத்துக்கொண்ட முன்னாள் மாணவர்கள்.
07-02-2026 | 00:16
மேலும் இன்றைய போட்டோ
மத்திய அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி கவுன்சில் சார்பில் ஆராய்ச்சி, தொழில், தொடக்க மற்றும் தொழில் முனைவோர் மாநாடு 2026 சென்னையில் நடந்தது. இதில் பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. உடன் இடமிருந்து, புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலர் ரவிச்சந்திரன், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல் துறை அமைச்சர் ஜிதேந்தர் சிங், அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சி கவுன்சில் இயக்குனர் கலைச்செல்வி.இடம் : நந்தம்பாக்கம்
14-02-2026 | 21:07
விழுப்புரம் ஆதிவாலீஸ்வர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்திக்கு சந்தன அபிஷேகம் நடந்தது.
14-02-2026 | 21:03
திருவான்மியூர் பிரபுபாதரின் இஸ்கான் சார்பில், 15ம் ஆண்டு ரத யாத்திரை வெகு விமர்சையாக நடத்தப்பட்டது. இதில், ஏராளமானோர் பங்கேற்றனர். இடம்: அடையாறு.
14-02-2026 | 21:03
மகா சிவராத்திரியை முன்னிட்டு கருவடிக்குப்பம் குரு சித்தானந்தா சுவாமி கோவிலில் நடந்த பரதநாட்டிய நிகழ்ச்சியில் பங்கேற்றுகளுக்கு நாட்டியஞ்சலி அறக்கட்டளை நிறுவனர் சூசைராஜ் சான்றிதழ் வழங்கினார்.
14-02-2026 | 20:30