இன்றைய போட்டோ
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் மாசி திருவிழா பிப்ரவரி 15ம் தேதி கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக துவங்கியது. முக்கிய விழாவான நடந்த தேரோட்டத்தில் அலங்கரிக்கப்பட்ட அங்காளம்மன் தேரில் எழுந்தருளி மாட வீதிகள் வழியாக வலம் வந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
22-02-2026 | 08:29
மேலும் இன்றைய போட்டோ
காலமுறை ஊதியம் வழங்கிட வேணடும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கிராம உதவியாளர்கள் தொடர்ந்து 21வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இடம்.எழிலகம் வளாகம்
25-02-2026 | 22:57
சென்னை அரும்பாக்கம் டி.ஜி வைஷ்ணவா கல்லூரியில் நடந்த ரத்த தான முகாமில் பங்கேற்ற மாணவர்கள்.
25-02-2026 | 22:57
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் வருவாய்த்துறை சங்கத்தினர் கூட்டமைப்பு சார்பில் ஒன்பது அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்
25-02-2026 | 22:54
புதுவை மாநில கட்டட தொழிலாளர் ஏ.ஐ.டி.யு.சி.,சங்கத்தின் சார்பில் கட்டட தொழிலாளர் நல வாரியம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
25-02-2026 | 22:53
தேர்தல் நெருங்கியாச்சு மக்களுக்கு அ.தி.மு.க., சார்பில் பறந்து போகும் பரிசு பொருட்கள். இடம்: கோவை, ராமநாதபுரம்
25-02-2026 | 22:53
சாலை விதிகளை மதிப்போம் நலமுடன் வாழ்வோம் என்ற கோசத்துடன் தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம் சானிட்டோரியும் வரை விழிப்புணர்வு பேரணி நடத்திய கல்லூரி மாணவர்கள்
25-02-2026 | 22:52