உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

கால்நடைகளுக்கும் நிலத்தடி நீர் ஆதாரமாக இருந்த சிவகங்கை அருகே இளந்தங்குடிபட்டி கண்மாய் தண்ணீர் இன்றி வறண்டு காட்சியளிக்கிறது.

27-04-2026 | 18:59


மேலும் இன்றைய போட்டோ

சூழ்ந்திருக்கும் இயற்கையின் பேராற்றலுக்கு மத்தியில் மனிதர்களுக்குள் இருக்கும் ஆற்றல் தான் இன்னொரு உணவு. இன்று ஒரு தினம் உழைப்பாளருக்கு இலக்கணம் கொடுத்தாலும், வருடந்தோறும் வியர்வை தான் முகவரி. ரேகைகள் தேய, ஆச்சரியக்குறியான முதுகு கேள்விக்குறியாக மாற, தொடர்ந்து வரும் வாழ்க்கை கேள்விகளால், நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கிறது இப்பயணம். இன்று உழைப்பாளர் தினம்.

01-05-2026 | 06:58


காய்கறி மற்றும் தக்காளிப்பெட்டிகளை வண்டியில் வைத்து இழுத்துச் செல்லும் தொழிலாளர். இடம்: உடுமலை (இன்று உழைப்பாளர் தினம்)

01-05-2026 | 06:45


தஞ்சாவூர் பெரியகோவில் அருகே சிவகங்கை குளம் அமைந்துள்ளது. இக்குளம் பெரியகோவிலில் இருந்து வரும் மழைநீரை சேமிக்கும் வகையில், ராஜராஜ சோழனால் உருவாக்கப்பட்டது. தீர்த்தகுளமாக விளங்கிய சூழலில், குளத்தில் நீரின்றி வறண்டு காணப்படுகிறது.

01-05-2026 | 06:40


இன்று (மே 01) உழைப்பாளர் தினத்தையொட்டி, சென்னை மெரினா காமராஜர் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலைக்கு வர்ணம் பூசும் தொழிலாளர்கள்.

01-05-2026 | 06:30


மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக இன்று(மே 1) காலை 5.50 மணியளவில் வைகை ஆற்றில் கள்ளழகர் பச்சை பட்டுடுத்தி எழுந்தருளினார்.

01-05-2026 | 06:18


சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் ஓட்டு என்னும் மையத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.

30-04-2026 | 21:54


சென்னை தி நகரில் உள்ள ஶ்ரீ அகஸ்தியர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. இடம் : தி நகர்

30-04-2026 | 21:54


சென்னையில் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் வெப்பத்தை சமாளிக்க கையில் குடையுடன் வெளியில் வரும் பொதுமக்கள்.இடம் : ஓ எம் ஆர் , கந்தஞ்சாவடி

30-04-2026 | 21:54


சிவகங்கை அருகே பெருமாள்பட்டி கண்மாயில் தண்ணீர் இன்றி வறண்டு காட்சியளிக்கிறது.

30-04-2026 | 21:53