மேலும் இன்றைய போட்டோ
கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் அருகே கோவில் கட்ட பள்ளம் தோண்டி போது கருப்பு, சிவப்பு பானை ஓடுகள், இரண்டு மண் குவளைகள் கிடைத்தன. அவை 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஈமப்பேழை என தெரிந்தது. கிருஷ்ணகிரி மாவட்ட அருங்காட்சியகத்தில் அவை ஒப்படைக்கப்பட்டன.
22-07-2026 | 07:04
அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் 292 செவிலியர்களை அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றம் செய்வதை கண்டித்தும், பணி நிரந்தரம் கோரியும், சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.
22-07-2026 | 06:59
உத்தரகண்ட் மாநிலம் முசோரியில் பெய்த கனமழை காரணமாக டேராடூன்- முசோரி சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
22-07-2026 | 06:54
சிவகங்கையில் நகராட்சி ஊராட்சி உள்ளாட்சி ஊழியர்கள் சங்கம் சார்பில் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
21-07-2026 | 15:26