இன்றைய போட்டோ
வட மாநிலங்களில் கங்கை நதிக்கு நடைபயணமாக சென்று அங்கிருந்து புனித நீரை காவடியில் சுமந்து வந்து தங்கள் ஊரில் உள்ள சிவன் கோவில்களில் அபிஷேகம் செய்வது கன்வர் யாத்திரை என்று அழைக்கப்படுகிறது; அவ்வாறு நடைபயணம் மேற்கொண்ட பக்தர் ஒருவர் காவடியின் ஒருபுறத்தில் தன் மகளை சுமந்து சென்றார். இடம்; மீரட், உத்தரபிரதேசம்.
01-08-2026 | 06:28
மேலும் இன்றைய போட்டோ
அவிநாசி, புதிய பஸ் ஸ்டாண்ட் பின்புறம் உள்ள குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ, புகையால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
31-07-2026 | 22:01
நடைபாதையை மறைத்து தகர அட்டை விழுந்து இருப்பதால் நடந்து செல்வோருக்கு இடையூறாகவும், பொதுமக்களுக்கு விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. இடம்: லங்கா கார்னர், அரசு மருத்துவமனை அருகில்
31-07-2026 | 22:00
ஜி.எஸ்.டி துறையை கண்டித்து பாத்திர கடை வியாபாரிகள் கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இடம்:தங்க சாலை, பூங்கா நகர்.
31-07-2026 | 21:59
பெரும்பாக்கம் ஏரியில் இறங்கி ஆகாயத்தாமரை செடிகளைஅகற்றி பரிசல் மற்றும் வலைகளைப் பயன்படுத்தி தீவிரமாக மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள மீனவர்கள்.
31-07-2026 | 21:58
ஆடி மாத வெள்ளிக்கிழமை முன்னிட்டு சென்னை மயிலாப்பூர் முண்டக கன்னியம்மன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் நாக சிலைக்கு பால் ஊற்றி, பொங்கல் வைத்து சுவாமி தரிசனம் செய்தனர்.
31-07-2026 | 21:56
எத்தனை வெயிலையும் தாங்கும் கற்பகதரு பனை மரங்கள் இந்த ஆண்டு வெயிலை தாக்கு பிடிக்க முடியாமல் காய்ந்து வருகின்றன.. இடம்: திருநெல்வேலி மாவட்டம், இராமகிருஷ்ணாபுரம்..
31-07-2026 | 21:56