இன்றைய போட்டோ
நாட்டின் சுதந்திர தினம் வரும் 15ல் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, தேச பக்தியை மக்களிடையே பரப்பும் வகையில் ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக்கொடி என்ற இயக்கத்தை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது. இதன்படி ஜார்க்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் உள்ள பிரதான சாலையில் பிரமாண்ட தேசியக் கொடியை ஊர்வலமாக எடுத்துச் சென்ற மக்கள்.
10-08-2026 | 07:57
மேலும் இன்றைய போட்டோ
சென்னை, மாநிலக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு நிகழ்ச்சியில், முதல்வர் விஜய், காவலர் வேடம் அணிந்து வந்த சிறுவனை மேடையில் அழைத்து கொஞ்சினார்.
11-08-2026 | 21:37
சாலை பாதுகாப்பு மற்றும் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு சென்னை அண்ணா சாலை ஸ்பென்சர் சிக்னல் அருகே போக்குவரத்து போலீசார் சார்பில் நடந்தது. கல்லூரி மாணவிகள் பல்வேறு விழிப்புணர்வு மேற்கொண்டனர்.
11-08-2026 | 21:35
சென்னை ராயப்பேட்டை மணிக்கூண்டு சிக்னல் அருகே சாலையோர பூங்காவில் புதிதாக வைக்கப்பட்டுள்ள வன விலங்குகளின் பொம்மைகள் காண்போரை கவரும் வண்ணம் உள்ளது.
11-08-2026 | 21:35
கிண்டி ரயில் நிலையம் எதிரே புதிதாக பேருந்து நிறுத்தம் அமைப்பதற்காக மேற்கூரை அமைக்கும் பணி துவங்கியுள்ளது.இடம் : கிண்டி
11-08-2026 | 21:35
சுதந்திர தின விழாவில் சென்னை கோட்டை கொத்தளத்தில் ஏற்றப்படவுள்ள மூவர்ணக் கொடி சென்னை அண்ணா சாலையில் உள்ள காதி பவனி தயார் நிலையில் உள்ளது.
11-08-2026 | 21:35
விநாயகர் சதுர்த்தி குறித்து செய்தியாளர் சந்திப்பில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பேசினார். இடம்: ஆர்.எஸ்., புரம் கென்னடி தியேட்டர் அருகே,
11-08-2026 | 21:34