உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

தினமலர் நாளிதழ், சத்யா ஏஜென்சி சார்பில், ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ, கோவை கொடிசியா அரங்கில் இன்று (ஆகஸ்ட் 14) துவங்கியது. கலெக்டர் பவன் குமார் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். அருகில் (இடமிருந்து) இஎல்ஜிஐ மார்க்கெட்டிங் துறை தலைவர் பார்த்தசாரதி, இல்ஜிஐ மேனேஜிங் டைரக்டர் பாலகிருஷ்ணன், பி.ஆர்.ஓ., செந்தில் அண்ணா, சத்யா ஏஜென்சிஸ் மண்டல சேர்மன் ஆபிரகாம், சுஜாதா ஹோம் அப்ளையன்ஸ் சேர்மன் உதயத்துல்லா.

14-08-2026 | 11:46


மேலும் இன்றைய போட்டோ

தினமலர் கார்னிவல் அப்பார்ட்மெண்ட் கொண்டாட்டம் போரூர் ஓசியன் க்ளோரோபில் அடுக்குமாடி குடியிருப்பில் நடந்தது. இதில் மினி மாரத்தான் போட்டியில் பங்கேற்ற குழந்தைகள்

15-08-2026 | 19:47


சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டத்தில் மாணவியர் தங்கள் முகங்களில் மூவர்ண கொடியின் வண்ணங்களை வரைந்து கொண்டனர்.

15-08-2026 | 06:49


செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் ஐந்தாம் ஆண்டு காற்றாடி திருவிழா துவங்கியது. நாளை மறுநாள் வரை நடக்கும் இதில் நம் நாட்டு காற்றாடிகள் மட்டுமின்றி வெளிநாட்டு காற்றாடிகள் என 100க்கும் மேற்பட்ட காற்றாடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.

15-08-2026 | 06:43


தினமலர் நிர்வாகத்தினர் நேற்று முதல்வர் விஜயை சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்து பேசினர். இடமிருந்து தினமலர் இணை இயக்குனர் ஆர்.ஸ்ரீனிவாசன், வெளியீட்டாளர் முனைவர் எல்.ராமசுப்பு, கோவை பதிப்பு வெளியீட்டாளர் இல.ஆதிமூலம், புதுச்சேரி பதிப்பு வெளியீட்டாளர் கே.வெங்கட்ராமன், இணை இயக்குனர் ஆர்.லட்சுமிபதி, சென்னை பதிப்பு இணை ஆசிரியர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி.

15-08-2026 | 05:18


சுதந்திர தின விடுமுறையை தொடர்ந்து தொடர் விடுமுறை என்பதால் சொந்த ஊருக்கு செல்லும் பொது மக்களால் ஜி. எஸ்.டி சாலையில் போக்குவரத்து நெரிசல் இடம் பெருங்களத்தூர்

14-08-2026 | 22:04


80வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு மூவர்ண நிறத்தில் ஜொலித்த மேட்டுப்பாளையம் ரயில் நிலையம்.

14-08-2026 | 22:01


ஆடி விழாவை முன்னிட்டு திண்டுக்கல் மெங்கில்ஸ் ரோடு பாலநாகம்மாள் கோயிலில் முளைப்பாரி, மின் ரத ஊர்வலம் நடந்தது.

14-08-2026 | 22:00


சுதந்திர தின விடுமுறையை தொடர்ந்து தொடர் விடுமுறை என்பதால் சொந்த ஊருக்கு செல்ல கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் குவிந்த பொதுமக்கள்

14-08-2026 | 22:00


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆடிப்பூரம் பிரம்மோற்சவம் பத்தாவது நாளில், கோவில் முதல் பிரகாரத்தில் உள்ள சிவகங்கை குளத்தில், பராசக்தி அம்மனுக்கு சூலம் ரூபத்தில் தீர்த்தவாரி நடந்தது.

14-08-2026 | 21:59