அரசு கல்லூரி ஜூனியர்களை சித்ரவதை செய்த சீனியர்கள்
கேரளாவின் கோட்டத்தில் செயல்படும் அரசு நர்ஸிங் கல்லூரியில், முதலாம் ஆண்டு மாணவர்கள் 6 பேரை, சீனியர் மாணவர்கள் கொடூரமாக ராகிங் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. முதலாம் ஆண்டு மாணவர்களை நிர்வாணமாக்கி, அவர்களின் அந்தரங்க உறுப்புகளில், உடற்பயிற்சி செய்ய பயன்படும் டம்பிள்சை கட்டி தொங்கவிட்டு சித்ரவதை செய்யப்பட்டு உள்ளனர். மாணவர்களை கட்டிலில் கட்டி வைத்து, ஜியோமெட்ரி டிவைடர் மூலம் அவர்களின் உடலில் குத்தியும், கீறியும் காயங்களை ஏற்படுத்தி உள்ளனர். அந்த காயத்திலும், வாயிலும் லோஷனை ஊற்றி சீனியர்கள் கொடுமைப்படுத்தி உள்ளனர்.
பிப் 14, 2025