/ தினமலர் டிவி
/ பொது
/ ஆம்ஸ்ட்ராங் vs சம்போ செந்தில்? மிகப்பெரிய திருப்பம் | Armstrong vs Sambo senthil | Armstrong case
ஆம்ஸ்ட்ராங் vs சம்போ செந்தில்? மிகப்பெரிய திருப்பம் | Armstrong vs Sambo senthil | Armstrong case
தமிழகத்தை உலுக்கிய ஆம்ஸ்ட்ராங் வழக்கில் இப்போது மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இதுவரை ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்குப்பழியாக தான் இந்த கொலை நடந்தது என்று சொல்லப்பட்டது. காரணம், கொலை நடந்த சில மணி நேரத்தில் ஆற்காடு சுரேஷ் தம்பி பொன்னை பாலு, மைத்துனர் அருள் மற்றும் கொலையாளிகள் போலீசில் சரண் அடைந்தனர். ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்குபழியாகவே ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்தோம் என்று வாக்குமூலமும் கொடுத்தனர். போலீஸ் விசாரணையில் ஆற்காடு சுரேஷ் காதலியும் பெண் ரவுடியுமான அஞ்சலை, இன்னொரு பெண் ரவுடி மலர்கொடி உள்ளிட்டோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
ஜூலை 22, 2024