உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்தி சுருக்கம் | 01 PM | 22-10-2024 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 01 PM | 22-10-2024 | Short News Round Up | Dinamalar

முருகனின் ஆறுபடை வீடுகளின் ஐந்தாம் படை வீடான திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோயிலுக்கு, தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் வந்து செல்கின்றனர். பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக கோயில், உண்டியலில் நகை, பணம் உள்ளிட்டவற்றை காணிக்கையாக செலுத்தி செல்கின்றனர். கடந்த 17 நாட்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணும் பணி, கோயில் வசந்த மண்டபத்தில் நடந்தது. உண்டியல் காணிக்கை மற்றும் திருப்பணி காணிக்கையாக மொத்தம் 80 லட்சத்து 7 ஆயிரத்து 917 ரூபாய் கிடைத்துள்ளது. 234 கிராம் தங்கம், 3,456 கிராம் வெள்ளி ஆகியவையும் காணிக்கையாக கிடைத்தன.

அக் 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி