ADDED : டிச 11, 2014 08:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* காலத்தைப் பயனுடையதாக்குங்கள். ஒருபோதும் வீணாகக் கழிக்க முயலாதீர்கள்.
* எதை விரும்புகிறோமோ அதையே அடைகிறோம். எதை ஆதரிக்கிறோமோ அதுவே வளர்ச்சியடைகிறது.
* அறிவு தான் ராஜா. மனம் அறிவுக்கு அடங்கியே நடக்க வேண்டும். இல்லாவிட்டால் கேடு தான் உண்டாகும்.
* துணிவுடன் செயலாற்றுங்கள். லட்சியத்தில் ஆணி அடித்தாற் போல பற்று கொள்ளுங்கள்.
* மனதில் பயத்தை வளர்ப்பவன் விஷம் கொண்ட பாம்பை வளர்ப்பது போல ஆபத்தை அடைவான்.
- பாரதியார்