ADDED : மே 19, 2014 01:05 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* கோபம் என்னும் இருள் மனதைச் சூழ்ந்து விட்டால், எந்த செயலையும் சரிவர செய்ய முடியாது.
* உழைப்பில் தான் சுகமிருக்கிறது. இதை அனுபவத்தால் மட்டுமே ஒருவரால் உணர முடியும்.
* மற்றவர்கள் உள்ளத்தில், நம்மைப் பற்றி பொய்யான மதிப்பீடு உண்டாவதற்கு இடம் கொடுக்கக் கூடாது.
* எப்போதும் மலர்ந்த முகம், இனிய சொல், தெளிந்த பார்வையுடன் இருப்பது அவசியம்.
* உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாகி விட்டால் அது வாக்கிலும் வெளிப்படத் தொடங்கும்.
- பாரதியார்