
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* மனம் கலங்கிவிட்டால் புத்தியும் கலங்கி விடும். மனதை வலிமை பெறச் செய்வதே சிறந்த யோகம்.
* மனதை எப்போதும் தைரியம் என்னும் கடிவாளத்தால் பிடித்து நிறுத்தி வையுங்கள்.
* உலக வாழ்வில் உழன்று கொண்டு இருந்தாலும், சஞ்சலத்திற்கு சிறிதும் இடம் தராமல் மனதைக் கட்டப் பழகுங்கள்.
* எப்போதும் மனதில் மாறாத இன்பம் நிலைத்திருக்கட்டும். இதுவே மனித வாழ்வின் சிறந்த பயன்.
* நீதி, தர்மம், அன்பு, சமாதானம், சமத்துவம் போன்ற உயர்பண்புகள் நிலையான இன்பத்திற்கு வழிவகுக்கும்.
- பாரதியார்