
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* மூலைக்கு மூலை உடற்பயிற்சி சாலை அமைத்தால் ஆரோக்கியமான சமுதாயம் உருவாகும்.
* உடம்பு வியர்க்க வியர்க்க உழைப்பில் ஈடுபட்டால் பசித்துப் புசிக்கலாம். நோய் அனைத்தும் பறந்தோடும்.
* உழைப்பின் மீது நம்பிக்கை வைத்து கடமை ஆற்றினால் சோம்பல் சாம்பலாகி விடும்.
* உழைப்பில் மனதை செலுத்தினால், எப்போதும் உற்சாகத்துடன் பொழுதைக் கழிக்கலாம்.
* அச்சமில்லாத வாழ்வே ஆனந்தமான வாழ்வு. மனதில் பயம் என்னும் விஷம் நுழைய அனுமதிப்பது கூடாது.
-பாரதியார்