ADDED : ஜூன் 21, 2013 10:06 AM

* மனிதன் பணம் தேடுவதற்குப் பல வழிகளில் முயற்சிப்பது நியாயமே என்றாலும், அவரவர் தகுதிக்கேற்ப முயற்சிக்க வேண்டும்.
* செல்வம் என்பது பணம் மட்டுமன்று. அறிவு, ஒழுக்கம், பொருள் ஆகியவையும் செல்வம் தான்.
* செல்வம் ஒருவருக்கொருவர் குறையும் போது பொறாமையும், வஞ்சனையும் மனதில் எழுகின்றன.
* நூறு மனிதர் சேர்ந்து ஒருவனை நாயகன் என்று தீர்மானம் செய்து விட்டால் அவனுக்கு மிகுந்த வலிமை உண்டாகி விடுகிறது.
* தெய்வமே சரணம் என்று இருப்பவர் உள்ளத்திலே சோம்பல் உண்டாகாது. அவர்கள் எப்போதும் உழைக்கச் சித்தமாயிருப்பர்.
* நல்ல விளக்கிருந்தாலும் பார்வை இருந்தால் தான் காண முடியும். நாலுபேரின் துணையிருந்தாலும் சுயபுத்தி இருந்தால் தான் மனிதன் வாழ முடியும்.
* பசி வந்தால் கோபம் வருகிறது. பசியடங்கினால் கோபம் அடங்குகிறது. இதைக் கருதி தான் ஏழைக்கு அன்னம் இடுவதை உத்தம தர்மம் என்றனர்.
- பாரதியார்