ADDED : ஜூலை 18, 2009 04:30 PM

<P>* நம்பிக்கை உண்டானால் வெற்றியுண்டு. அந்த நம்பிக்கையின் முக்கிய லட்சணம் என்னவென்றால் விடாமுயற்சி மட்டுமே.<BR>* ஒரு முயற்சியைக் கைக்கொண்டால், பிறகு வெற்றி உண்டாகும் வரை அதில் எப்போதும் கண்ணும் கருத்துமாக பாடுபட வேண்டும். <BR>* ஒருவருக்கொருவர் மனதாலும் தீங்கு நினைக்காதீர்கள். ஒருவருக்கொருவர் பயப்படத் தேவையில்லை. நாம் இந்த விரதத்தை மேற்கொள்வது நல்லது. <BR>* வெளியிலிருந்து வரும் புத்திசாலியின் யோசனையைக் கேட்கலாம். குடும்பத்தைச் சேர்ந்த மூடனின் பேச்சால் பயனேதும் விளையாது.<BR>* லாபநஷ்டங்களை யோசித்த பிறகு தான், ஒரு துறையில் இறங்க வேண்டும். ஆனால், வாழ்நாள் முழுவதும் வெறுமனே யோசித்துக் கொண்டிருப்பதில் எந்தப்பயனும் இல்லை.<BR>* நாம் ஒரு செயலில் ஊக்கம் கொண்டு முயற்சி செய்யத் தொடங்கினால் அந்தச் செயலை நடத்த தெய்வம் வழி காட்டும். நல்ல வழிகள் பல நமக்குத் தென்படத் தொடங்கும். </P>