ADDED : ஜூன் 10, 2014 04:06 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* மனிதன் முயற்சித்தால், தான் விரும்பும் உயர்நிலையை எட்ட முடியும். மதியின் வலிமையால் மனித வாழ்வு சிறக்கும்.
* படித்தவர் படிக்காதவரை அவமதிப்பது கூடாது. அதேபோல, செல்வந்தர்கள் ஏழைகளை இழிவாக நடத்துவது கூடாது.
* நிறை, குறை இரண்டும் கொண்டவனாகவே மனிதனை இயற்கை படைத்திருக்கிறது.
* எப்போதும் சத்தியத்தை பேசி தர்மவழியில் நடக்கும் மனிதனை தெய்வம் என்றே சொல்ல வேண்டும்.
* மன தைரியத்தைக் காட்டிலும் சிறந்த புண்ணியம் உலகில் வேறில்லை.
- பாரதியார்