ADDED : அக் 20, 2013 05:10 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* ஒன்றைக் கொடுத்துதான் இன்னொன்றை பெற முடியும். இது எங்குமே உள்ள உண்மைதான். நல்லதைக் கொடுத்து நல்லதையே பெற்றுக்கொள்ள மனிதன் தயாராக இருக்க வேண்டும்.
* தெய்வீக வாழ்க்கைக்கு காவி அணிய வேண்டும் என்ற அவசியமில்லை. நெற்றியில் இட்டுகொள்ள வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. மணிக்கணக்கில் வெயிலில் தலைகீழாக நிற்க வேண்டும் என்பதும் தேவையில்லை. மனதை தெய்வீகமாக்கினாலே போதும். இறைவன் அதில் குடி அமர்வான்.
* முழு மனதுடன் எந்தப் பணியையும் செய்யுங்கள். விடாமுயற்சியுடனும் கவனமாகவும் அதைச் செய்து முடிக்க தீர்மானம் செய்துகொள்ளுங்கள். வெற்றி இலக்கை சுலபமாக அடைவீர்கள்.
* உண்மை பேசுபவனாக, நல்லவனாக, எல்லாரையும் நேசிப்பவனாக, தன்னலமற்றவனாக வாழ வேண்டும்.
- சின்மயானந்தர்