
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* பண்டிதர் முதல் பாமரர் வரை, 'எதிலும் கணக்காயிருக்கணும்' என்று அடிக்கடி சொல்கிறார்கள். இது பணத்தை மட்டும் குறிப்பதல்ல, பேச்சையும் குறிக்கிறது
* பேச்சைக் குறைத்தால், நேரத்தை மிச்சப்படுத்த முடியும். நிம்மதியை வரவழைத்துக் கொள்ள முடியும்.
* பண விஷயத்தில் கணக்காக இருக்க விரும்புகிறோம். வியாபாரத்தில் பேரம் பேசி சாமர்த்தியமாக வாங்குவது மட்டுமே கணக்காக இருப்பதாகாது.
* நியாயமான வழியில் பணம் சம்பாதிப்பதும், அதை பயனுள்ள வழியில் செலவழிப்பதுமே போதுமானது.
- காஞ்சிப்பெரியவர்