/
ஆன்மிகம்
/
ஆன்மிக சிந்தனைகள்
/
காஞ்சி பெரியவர்
/
நிம்மதி நிம்மதி உங்கள் சாய்ஸ்
/
நிம்மதி நிம்மதி உங்கள் சாய்ஸ்
ADDED : டிச 11, 2013 01:12 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* நாம் எப்படியோ பூமியில் பிறந்து விட்டோம். நமக்குள் அழுக்கை (பாவங்களை) ஏற்றிக் கொள்ள இடம் கொடுத்து விட்டோம். இனியாவது அழுக்கை போக்குவதற்காக பயன்படுத்தி கொள்வோம்.
* வாக்கு, மனம், உடல் என மூன்றாலும் பாவம் செய்து இருக்கிறோம். அவற்றைக் கொண்ட அந்தப் பாவத்தைப் புண்ணியத்தில் கரைத்து விட முயற்சிக்க வேண்டும்.
* நாம் இந்த உலகை விட்டு ஒருநாள் போக வேண்டியது உறுதி. அதற்குள் பாவமூட்டையைத் தொலைத்து விட்டால் போதும் ஆனந்தம் கிடைத்து விடும்.
* வெளியுலகப் பொருட்களால் நிம்மதியும், மகிழ்ச்சியும் கிடைக்கிறது என்று நினைப்பது அறியாமை. மகிழ்ச்சியோ, நிம்மதியோ
அவரவர் மனதைப் பொறுத்த விஷயங்களே.
- காஞ்சிப்பெரியவர்