
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* அனைவரும் போற்றும் விதத்தில் உயர்வாழ்வு வாழ வேண்டுமானால், கணப்பொழுதைக் கூட வீணாக்குவது கூடாது.
* உள்ளத்தூய்மையே ஒழுக்கத்தின் உயிர்நாடி. உண்மையைப் பின்பற்றினால் உள்ளம் தூய்மையுடன் விளங்கும்.
* பிறருக்கு உரியவற்றை அவருடைய அனுமதியின்றி அனுபவிக்க முயல்வது நல்ல பண்பு அல்ல.
* யாருக்கும் நான் இனி தீங்கு செய்ய மாட்டேன் என மன உறுதி எடுத்துக் கொள்ளுங்கள்.
* இளமையும், அழகும் என்றென்றும் நிலைத்திருக்கும் என்று மனிதன் கர்வம் கொள்வது கூடாது.
- மகாவீரர்