ADDED : பிப் 19, 2024 01:02 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* எல்லோரிடமும் நல்லவர்களாக இருங்கள். மறுமைநாளில் அது பயன் தரும்.
* தீயவர்களுடன் நட்பு கொள்ளக்கூடாது. மீறினால் அவர்களின் பாவங்களும் நட்பு கொண்டவரின் கணக்கில் சேரும்.
* ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக் கொள்ளுங்கள். அப்போது மனதிலுள்ள பொறாமை அழியும்.
* கொடுத்த வாக்குப்படி நடக்காதவன் மார்க்கத்தை பின்பற்றுபவன் அல்ல.
* ஒருவன் யாரிடம் பழகுகிறானோ அவனது குணம் அவனுக்கு வந்துவிடும். ஏனெனில் ஒவ்வொருவனும் தன் நண்பனையே அதிகம் பின்பற்றுவான்.