ADDED : மார் 11, 2015 02:03 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* மலர்ந்த தாமரையில் மணம் கமழ்வது போல, நல்லவர்களைச் சுற்றி நல்ல எண்ண அலைகள் பரவி இருக்கும்.
* அரை மனதுடன் முயற்சியில் ஈடுபடாதீர்கள். ஆர்வமில்லாத செயலால் நன்மை ஏற்படுவதில்லை.
* கடவுளுக்குப் படைத்த உணவைச் சாப்பிட்டால், உடல் ஆரோக்கியத்தோடு உள்ளமும் பலம் பெறும்.
* அரிதான இந்தப் பிறவியை, கடவுளை அறிவதற்காகப் பயன்படுத்துபவனே சிறந்த அறிவாளி.
* எதையும் இலவசமாகப் பெறக்கூடாது. உழைப்பினால் கிடைக்கும் சம்பாத்தியமே சிறந்தது.
- சாய்பாபா