
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* ஒற்றுமை என்பது உணர்வு மட்டுமல்ல. அதுவே மனித வாழ்வின் அடிப்படை. அன்பினால் மட்டுமே நம்முள் ஒற்றுமையைப் பலப்படுத்த முடியும்.
* ஆசைக்கு ஒரு உச்ச வரம்பை வைத்துக் கொள்ளுங்கள். அப்போது தான் மனம் அமைதியுடன் இருக்கும்.
* இயற்கை அளிக்கும் செல்வங்களை அளவோடு ஏற்று அனுபவியுங்கள். இயற்கையை புறக்கணித்தால் மனித சமுதாயம் அழிவை நோக்கிச் சென்றுவிடும்.
* உரிமை என்பது கடமையில் அடங்கி இருக்கிறது. கடமை உணர்வோடு கூடிய உழைப்பு தான், உயர்வுக்கு வழிவகுக்கும்.
* புத்தக அறிவு மட்டும் பயன் தராது. எதையும் அனுபவத்தின் மூலம் சோதித்து உணருங்கள்.
* மக்கள் சேவையே மகேசன் சேவை. புகழுக்காக சேவை செய்யாதீர்கள். அன்புவழியில் இறைவனுக்காக சேவையாற்றுங்கள்.
- சாய்பாபா