ADDED : நவ 22, 2017 08:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
*பிறர் குறையை பெருந்தன்மையுடன் மறக்க, மன்னிக்க முயலுங்கள்.
*இழந்த பொன்னை திரும்ப சம்பாதிக்க முடியும். ஆனால் காலம் போனால் திரும்புவதில்லை.
*கடவுளே காலத்தின் வடிவம். நேரமே அவரது உடலாக இருக்கிறது. வாழ்நாளில் வினாடி
நேரத்தையும் வீணாக்கக் கூடாது.
*கடமையைச் செய்யாமல் நேரத்தை வீணாக்குபவன் பூமிப் பந்திற்கு பாரமாகி விடுவான்.
*கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டால் சமுதாயம், விலங்குகள் வாழும் காடாக மாறும்.
- சாய்பாபா