ADDED : செப் 20, 2016 10:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* பலனைப் பற்றி சிந்திக்காதே. கடமையில் அக்கறையுடன் ஈடுபடு. இதுவே சிறந்த வேள்வியாகும்.
* அன்பு, இரக்கம், கருணை மிக்க மனிதர்கள் வாழும் இடம் நறுமணம் மிக்க மலர்த்தோட்டம் போன்றது.
* போதும் என்னும் மனம் படைத்தவனே பணக்காரன்.
* ஆயிரம் நூல்களைப் படிப்பதை விட, ஒரு நல்ல நூலைப் பின்பற்றி நடப்பது மேலானது.
* பிறர் தூற்றினால் துவளாமலும், போற்றினால் பெருமிதம் கொள்ளாமலும் இருப்பவனே உயர்ந்தவன்.
- சாய்பாபா