ADDED : அக் 31, 2016 10:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* தன்னலமற்ற தொண்டும், ஒளி வீசும் தங்கம் போல மதிப்பிற்கு உரியது. மக்கள் தொண்டு ஆற்றுபவன் கடவுளுக்கே தொண்டு செய்கிறான்.
* ஆயிரம் அறிவுரைகளை அள்ளி வீசுவதை விட அரிய செயலில் ஈடுபடுவது சிறந்தது.
* குடும்ப வாழ்விற்கு செல்வத்தைக் காட்டிலும் ஒழுக்கமே மிக அவசியமானது.
* பேச்சில் கடுமை வேண்டாம். இனிய பழம் போல நல்ல சொற்களைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள்.
* தவறு செய்யாத மனிதன் உலகில் கிடையாது.
- சாய்பாபா