ADDED : ஜன 02, 2018 08:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* சொல்வது யாருக்கும் எளிதானது. ஆனால், வாக்களித்த படி நடந்து கொள்வது மிக கடினமானது.
* அணிகலன் பலவானாலும் தங்கம் ஒன்றே. அது போல மதங்கள் ஆயிரம் இருந்தாலும் உணர்த்தும் கடவுள் ஒருவரே.
* மக்களுக்குச் சேவை செய்வதை விட பலன் அளிக்கும் சிறந்த பிரார்த்தனை வேறில்லை.
* பணத்தை நாம் ஆள வேண்டுமே ஒழிய, ஒருபோதும் பணம் நம்மை ஆள இடம் தரக்கூடாது.
* பிறர் நமக்கு என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ, அதையே நாமும் செய்ய முன் வர வேண்டும்.
சாய்பாபா