ADDED : மார் 31, 2013 10:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* அன்பு, அமைதி, உண்மை, சேவை இவையே தியானத்தின் அடையாளங்கள். பேச்சில் மட்டுமல்லாமல் அன்றாட வாழ்விலும் இவற்றை செயல்படுத்துங்கள்.
* காலத்திற்கு மனிதன் கட்டுப்பட்டே ஆக வேண்டும். நேர ஒழுங்கு மிகவும் முக்கியமானது. ஒவ்வொரு நாளும் குறித்த நேரத்தில் குறித்த வேலையைச் செய்யுங்கள்.
* கடவுளையே லட்சியமாக சுவாசியுங்கள். அவருக்குள் ஆழ்ந்து விடுங்கள்.
* மவுனமாக கண்மூடி அமர்ந்திருப்பதல்ல தியானம். உணர்வால் கடவுளிடம் ஒன்றுவதே நிஜமான தியானம்.
* உங்கள் பணியை தியானம் போல் மனம் ஒன்றிச் செய்யுங்கள். அது தான் உயர்ந்த தியானம்.
* முதலில் கடவுள், இரண்டாவது உலகம், கடைசியாக நான். இந்த வரிசையில் தான் நம் வாழ்வு அமைந்திருக்க வேண்டும்.
* வேண்டுவது அனைத்தையும் கடவுள் வழங்குவார். எனவே, சரியானதைக் கேட்பதில் எச்சரிக்கையாய் இருங்கள்.
- சாய்பாபா