ADDED : மார் 21, 2013 05:03 PM

* உலகில் பெறுவதற்கு அரிய செல்வம் கடவுளின் அருள் மட்டுமே. கண்ணை இமை காப்பது போல கடவுள் காப்பாற்றுகிறார் என்ற உறுதி மிக்கவன் இச்செல்வத்தைப் பெறுகிறான்.
* அன்பே சிவம். சிவமே அன்பு. ஆழ்ந்த அன்புடன் அனைத்து உயிர்களையும் நேசியுங்கள். பிறருக்குத் தொண்டாற்றுங்கள். அதுவே உயரிய வழிபாடு.
* உள்ளத்திலுள்ள மிருக உணர்ச்சிகளைக் களைந்தெறியுங்கள். தெய்வீக உணர்ச்சி பெருக்கெடுப்பதைக் காண்பீர்கள்.
* காதுகள் நல்ல விஷயங்களை மட்டுமே கேட்கட்டும். கண்கள் நற்செயல்களை மட்டுமே காணும் பேறு பெறட்டும்.
* நடப்பதெல்லாம் நன்மைக்கே என்ற எண்ணத்துடன் செயல்படுங்கள். எல்லாம் அவன் விருப்பப்படியே நடக்கிறது என்ற உறுதியாக நம்புங்கள்.
* மனம் என்னும் தோட்டத்தில் வீண்பரபரப்பு, அறியாமை, பயம், பேராசை போன்ற விஷச்செடிகள் வளர்வதற்கு இடம் கொடுக்காதீர்கள்.
- சாய்பாபா